/indian-express-tamil/media/media_files/mJoi06x4Pubcs44JcQAj.jpg)
தமிழ்நாட்டில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்கக் கோரி ஜூன் 22ஆம் தேதி பா.ஜ.க. ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க வலியுறுத்தி ஜூன் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 35க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது.1980களில் ஏற்பட்டதுபோல் தமிழ்நாடு 40 ஆண்டுகள் பின்நோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 19 மற்றும் ஜூன் 20 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதாகக் கூறப்படும் குறைந்தது 38 பேர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளியும் அடங்குவர். மேலும் 82 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோகத்தை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மாவட்ட ஆட்சியர் ஸ்ரவன் குமார் ஜாதவத்தை இடமாற்றம் செய்தது. மேலும், காவல் கண்காணிப்பாளர் சமய் சிங் மீனாவை இடைநீக்கம் செய்துள்ளது.
மேலும், இந்த துயர சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் மற்றும் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.