100 நாள் வேலை நிதி: பணமில்லையா? மனமில்லையா? -ஸ்டாலின் கேள்வி

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளத்தை விடுவிக்க பணமில்லையா (அ) மனமில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான 100 நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார். வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளத்தை விடுவிக்க பணமில்லையா (அ) மனமில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

author-image
WebDesk
New Update
a

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரிலான நூறு நாள் வேலைத் திட்டத்தையும் பிடிக்கவில்லை என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மத்திய அரசை குற்றஞ்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

Advertisment

இந்தியக் கிராமப்புறப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, இரத்த ஓட்டமாக #UPA அரசால் வளர்த்தெடுக்கப்பட்ட #MGNREGA மீது சம்மட்டி கொண்டு அடித்து ஒரேயடியாக ஒழித்துக்கட்டும் வேலையில் இறங்கியிருக்கிறது இரக்கமற்ற பா.ஜ.க. அரசு


உங்களுக்கு 'வேண்டப்பட்ட' கார்ப்பரேட்டுகள் என்றால் பல லட்சம் கோடி ரூபாய்க் கடனைக் கூட ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்கிறீர்களே? வேகாத வெயிலில் உடலை வருத்தி, வியர்வை சிந்தி உழைத்த ஏழைகளின் சம்பளப் பணத்தை விடுவிக்க மட்டும் ஏன் பணமில்லை? பணமில்லையா அல்லது மனமில்லையா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisment
Advertisements

தமிழ்நாடெங்கும் இன்றைய ஆர்ப்பாட்டத்தில் கழக உடன்பிறப்புகளும் ஏழை மக்களும் எழுப்பும் குரல் டெல்லியை எட்டட்டும்! #SadistBJP அரசின் மனம் இரங்கட்டும் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Pm Modi Cm Mk Stalin Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: