Advertisment

பா.ஜ.க-வின் தேசிய தலைவரே கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

பா.ஜ.க-வின் தேசிய தலைவரே கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் என்று கூறியுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலில் அதிமுக களத்தில் இருக்கிறதா என்றும், அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாகியிருப்பதுடன், கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்தே அ.தி.மு.க எங்கே வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

பா.ஜ.க-வின் தேசிய தலைவரே கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் என்று கூறியுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலில் அதிமுக களத்தில் இருக்கிறதா என்றும், அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாகியிருப்பதுடன், கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்தே அ.தி.மு.க எங்கே வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisment

 கோவை மக்களவை தொகுதி இண்டியா கூட்டணியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுக கூட்டம் கோவை காளப்பட்டி பகுதியில் நடைபெற்றது.

 கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலமைச்சரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு மின்னிக் கொண்டிருக்கும் வேளையில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே திராவிட மாடல் ஆட்சியை கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு இந்திய மக்களிடம் இருந்து வருகிறது என்றார்.இந்தியா கூட்டணி மகத்தான ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பெற வேண்டும் என்ற முயற்சியில் ஒட்டுமொத்த கூட்டணிகளும் முயற்சி மேற்கொண்டிருக்கும் வேளையில் தமிழகத்தில் நாற்பதும் நமதே நாடும் நமதே என்ற எண்ணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றிக்கு வழி சேர்க்கும் வகையில் உழைத்துக் கொண்டிருக்கிறார் என்றும்

இந்தியா கூட்டணி வேட்பாளர் மகத்தான வெற்றியை தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் எனவும் முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்வும்  ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள் என்பதால் எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.இந்த தேர்தலை ஒரு சாதாரண  தேர்தலாக பார்க்க கூடாது என வலியுறுத்தியதுடன் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிப்பதாகவும்  தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்;

 

தொடர்ந்து இந்த மாநிலத்தை எவ்வளவு புறக்கணித்து வருகிறார்கள் எனவும் எதை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்பார்கள், மத ரீதியாகவும் ஜாதிய ரீதியாகவும் பிளவுபடுத்துவதை தவிர வேறு என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள் என விமர்சித்தார். இந்த வளர்ச்சியை இந்த பகுதிக்கு கொடுத்து இருக்கிறேன் என்று எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள் எனவும் ஆனால் திமுகவினர் மகளிர் உதவித்தொகை, நான் முதல்வன் என்ற மகத்தான திட்டத்தையும்,காலை உணவு திட்டத்தையும், கோவைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கப் போகிறோம் என புதிய விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை பேச முடியும், மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறோம் என குறிப்பிட்டதுடன்  கோவைக்கான திட்டம் என்று நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள், எதிரே இருப்பவர்கள் எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

வடையும் அல்வாவையும் தான் மக்களுக்கு கொடுக்கிறார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை.,எல்லா இடத்திலும் ஒன்றிய அரசு கொடுத்த அல்வாவையும் மோடி சுட்ட வடையையும் பற்றி மக்களிடம் கூறியிருக்கிறோம், எல்லோரும் மத்திய அரசு மீது மிகப்பெரிய கோபத்தில் இருக்கிறார்கள், அதன் வெளிப்பாடு ஒட்டுமொத்த தொகுதிகளிலும் நிச்சயமாக இண்டியா கூட்டணி பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றார். கட்சிகளுக்கான சின்னங்கள் மாற்றம் வைத்து தேர்தல் ஆணையம் எந்த அளவிற்கு செயல்படுகிறது என்பது  தெரியும் என்றும்  ஜனநாயகத்தின் ஒரே பாதுகாவலனாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் இந்த கூட்டணியை அமைத்திருக்கிறார்கள் எனவும் தேர்தல் அறிக்கை தயாரித்த குழு தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கட்சியினரை  மட்டுமின்றி அனைத்து மக்களிடமும் கோரிக்கைகள் பெற்று  அதில் மிக முக்கியமானவற்றை மற்றும் தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கிறோம் என்றும் கூறினார். மேலும் இன்றைய தினம் கோவை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜகவின் தேசிய தலைவரை இன்று போட்டியிட்டாலும் அவர் டெபாசிட் இழப்பார் நகைப்புடன் தெரிவித்தார். இதேபோல் திமுக தற்போது கணக்கு போட்டியாக பாஜகவை மட்டும் தான் கருதுகிறதா என்ற கேள்விக்கு பதில் அளித்த ராஜா,முதலில் அதிமுக களத்தில் இருக்கிறதா என்றும், அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாகியிருப்பதாகவும்  கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்தே அதிமுக எங்கே வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என கூறினார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment