பா.ஜ.க-வின் தேசிய தலைவரே கோவை தொகுதியில் போட்டியிட்டாலும் டெபாசிட் இழப்பார் என்று கூறியுள்ள அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, முதலில் அதிமுக களத்தில் இருக்கிறதா என்றும், அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் ஒன்றுதான் என்பது தெள்ளத் தெளிவாகியிருப்பதுடன், கோவையில் இரண்டாம் இடத்திற்கான போட்டி கடுமையாக இருப்பதை பொறுத்தே அ.தி.மு.க எங்கே வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி வேட்பாளர் மகத்தான வெற்றியை தருவார் என்பதை இந்த கூட்டத்தின் மூலம் தெரிந்து இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். எதிரணியினர் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் எனவும் முதல்வரின் ஆட்சியை இந்தியாவே வியப்பாக பார்த்துக் கொண்டிருக்கிறது என்வும் ஒவ்வொரு இல்லத்திலும் ஒவ்வொரு நபரும் மிகப்பெரிய ஒரு வளர்ச்சியை கண்டிருக்கிறார்கள் என்பதால் எதிரில் யார் இருந்தாலும் மிகப்பெரிய அளவில் எல்லோரும் டெபாசிட் இழக்கும் அளவில் திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்தார்.இந்த தேர்தலை ஒரு சாதாரண தேர்தலாக பார்க்க கூடாது என வலியுறுத்தியதுடன் ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்று வருகிற எதிரணியை வீழ்த்த தமிழினமே துடிப்பதாகவும் தமிழினத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்;
தொடர்ந்து இந்த மாநிலத்தை எவ்வளவு புறக்கணித்து வருகிறார்கள் எனவும் எதை சொல்லி அவர்கள் ஓட்டு கேட்பார்கள், மத ரீதியாகவும் ஜாதிய ரீதியாகவும் பிளவுபடுத்துவதை தவிர வேறு என்ன சொல்லி வாக்கு கேட்பார்கள் என விமர்சித்தார். இந்த வளர்ச்சியை இந்த பகுதிக்கு கொடுத்து இருக்கிறேன் என்று எதைச் சொல்லி ஓட்டு கேட்பார்கள் எனவும் ஆனால் திமுகவினர் மகளிர் உதவித்தொகை, நான் முதல்வன் என்ற மகத்தான திட்டத்தையும்,காலை உணவு திட்டத்தையும், கோவைக்கு மிகப்பெரிய அளவில் வளர்ச்சி கொடுக்கப் போகிறோம் என புதிய விமான நிலைய விரிவாக்கம் போன்றவற்றை பேச முடியும், மிகப்பெரிய அளவில் தொழில் வளர்ச்சியை கொடுக்கப் போகிறோம் என குறிப்பிட்டதுடன் கோவைக்கான திட்டம் என்று நாங்கள் சொன்னால் மக்கள் நம்புவார்கள், எதிரே இருப்பவர்கள் எதை சொன்னாலும் மக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.
வடையும் அல்வாவையும் தான் மக்களுக்கு கொடுக்கிறார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை.,
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.