/indian-express-tamil/media/media_files/2025/10/06/nainar-nadda-2-2025-10-06-07-54-15.jpg)
நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்தை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. தேர்தலை முன்னிட்டும் மாநிலத்தில் ஆளும் தி.மு.க இப்போதே ஓரணியில் தமிழ்நாடு என்று தனது பரப்புரை இயக்கத்தை தொடங்கியுள்ளது. அதே போல, எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்று பரப்புரை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதே போல, பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், ‘தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்று பரப்புரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது தேர்தல் பரப்புரை சுற்றுப் பயணத்தை அக்டோபர் 12-ம் தேதி மதுரையில் தொடங்குகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்தை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கி வைக்கிறார்.
பா.ஜ.க நயினார் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்தை மொத்தம் 3 கட்டங்களாக திட்டமிட்டுள்ளது. அதில், முதற்கட்டமாக வரும் 12-ம் தேதி மதுரையில் தொடங்கும் இந்தச் சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் நவம்பர் மாதம் 17-ம் தேதி திருநெல்வேலி வடக்கில் முடிக்கிறார்.
மதுரையில் அக்டோபர் 12-ம் தேதி தொடங்கும் நயினார் நாகேந்திரனின் பரப்புரை சுற்றுப் பயணத்தை பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தொடங்கிவைக்க உள்ளார். முன்னதாக, நயினார் நாகேந்திரான் கடந்த செப்டம்பர் 22-ம் தேதி டெல்லி சென்று இது தொடர்பாக ஜே.பி. நட்டாவை சந்தித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.