Advertisment

இலங்கைக்கு உதவி; தமிழக அரசு செய்ய வேண்டியது இதுதான்: ஸ்டாலினுக்கு அண்ணாமலை கடிதம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகங்களின் வழியாக திறந்த கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு இலங்கைக்கு செய்ய வேண்டிய உதவி என்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
annamalai K, K Annamalai, BJP President K Annamalai, annamalai bjp, Annalai letter to CM MK Stalin, தமிழ்நாடு அரசு, முக ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை, அண்ணாமலை ஸ்டாலினுக்கு கடிதம், Sri Lanka economic crisis, Annamalai, annamalai latest news, annamalai ips, Sri Lanka, Tamil nadu

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 4 நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். இலங்கை தலைநகர் கொழும்பு சென்ற அண்ணாமலை அங்கிருந்து நுவரெலியாவிற்கு பயணம் செய்கிறார். இலங்கையில் பொருளாதார நெருக்கடி தலைவிரித்தாடும் சுழ்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இலங்கை பயணம் செய்துள்ளது கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisment

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சமூக ஊடகங்களின் வழியாக திறந்த கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழக அரசு இலங்கைக்கு செய்ய வேண்டிய உதவி என்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனிவான கவனத்துக்கு,

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில், இலங்கைக்கு உதவுவதற்காக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இலங்கைக்கு அரிசி மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்களை அளிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரி மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தமிழக பாஜக வரவேற்றுள்ளதுடன், தமிழக மக்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் உதவிகள் இலங்கை முழுவதற்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலைக்கு ஏற்றதாக நாம் கருதும் திருக்குறளை இத்தருணத்தில் முதலமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

‘சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொலிய வண்ணம் செயல்’

தமிழக அரசின் சமீபத்திய சில நடவடிக்கைகள், குறிப்பாக 'ஆபரேஷன் கங்கா'வின் போது, ​​சர்வதேச மோதல் நடந்த சமயத்தில் அரசியல் லாபம் ஈட்டுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இந்தத் தீர்மானம் அத்தகைய ஒரு செயலாக மாறிவிடக் கூடாது என்று மட்டுமே நாங்கள் பயப்படுகிறோம். 'கங்கா நடவடிக்கை'யின் போது, ​​மீட்புக்காகக் காத்திருக்கும் ஒவ்வொரு இந்தியரும் நமது தாய்நாட்டிற்குத் திரும்புவதை நமது பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 இல், இலங்கையில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்தபோது, ​​மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், மாநிலத்தில் திமுக ஆட்சியும் ஒரு பெரிய மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டதைப் பார்த்தன. அதிகாரத்தில் இருந்தும், உத்தரவிடும் பதவியில் இருந்த போதிலும், தமிழ் மக்களை யுத்த பகுதியில் இருந்து மீட்பதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேற்று நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், உள்நாட்டுப் போரின் போது போர் நிறுத்தத்துக்கு, திமுக கைகோர்த்துக்கொண்டு ஒரு மாயக்கதையை உருவாக்க 2 மணி நேர உண்ணாவிரத அரசியல் சூழ்நிலையை ஏற்படுத்திய மற்றொரு சாதனையாக இருக்கக் கூடாது என்பதே எங்கள் கவலையாக இருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கைக்கு நமது நாடு ஏற்கனவே வழங்கியது வழங்க உள்ள உதவிகள் பற்றிய தகவல்கள் இல்லாதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எனவே இலங்கை மக்களுக்கு அந்நாடு கேட்ட அனைத்தும் வழங்கப்படுகின்றன என்ற உறுதியுடன் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் குறித்து தமிழக முதலமைச்சருக்கு தெளிவுபடுத்த இந்த வாய்ப்பை நாங்கள் எடுத்துக்கொள்கிறோம்.

இந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க நம்முடைய பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும், அவற்றை நான் பட்டியலிட விரும்புகிறேன்.

*இந்த ஆண்டு ஜனவரியில், இந்தியா இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டாலர் நாணய பரிமாற்றம் உள்ளடக்கிய நிதி உதவியை வழங்கியது.

ஒட்டுமொத்த அடிப்படையில், 2022 ம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை மக்களுக்கு இந்திய ஆதரவு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கி உள்ளது. 4 லட்சம் டன் எரிபொருள் 10 லட்சம் டன் சரக்குகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன. சமீபத்தில் கூடுதலாக 1 பில்லியன் கடன் வசதியின் கீழ் சுமார் 40,000 டன் அரிசி வழங்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை உயர்த்த உதவும்.

பிப்ரவரியில், பெட்ரோலியப் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்கு உதவியாகக் குறுகிய கால கடனாக இந்தியா 500 பில்லியன் டாலர்கள் வழங்கியது. நவம்பரில் 100 டன் நானோ நைட்ரஜன் திரவ உரங்களையும் வழங்கி இருப்பதைக் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்” என்று அந்த கடிதத்தில் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Sri Lanka Cm Mk Stalin Annamalai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment