Advertisment

ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பான பா.ரஞ்சித்தின் 'தீவிரவாதிகள்' கருத்து; அண்ணாமலை பதில்

இன்று கற்பூரம் ஏற்றாவிட்டால் தீவிரவாதிகளாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் உள்ளது – பா.ரஞ்சித்; பிரபலம் அடையலாம் என்று நினைப்பவர்களுக்கு இலவச விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை – தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை

author-image
WebDesk
New Update
annamalai and Pa ranjith

தமிழக பா.ஜ.க தலைவர் கே.அண்ணாமலை (இடது); திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் (வலது)

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தன்னையோ அல்லது தனது கட்சியையோ தாக்கினால் பிரபலம் அடையலாம் என்று நினைப்பவர்களுக்கு இலவச விளம்பரம் கொடுக்க விரும்பவில்லை என்று தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, நாடு அச்சம் நிறைந்த எதிர்காலத்தை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது என்ற திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின் கருத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்துள்ளார்.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: BJP’s Annamalai reacts to Pa Ranjith’s ‘terrorists’ remark over Ram mandir consecration

இன்று ஒரு முக்கியமான நாள், இல்லையா? இன்று கற்பூரம் ஏற்றாவிட்டால் தீவிரவாதிகளாகக் கருதப்படும் நிலை இந்தியாவில் உள்ளது. அடுத்த 5-10 ஆண்டுகளில் நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நமக்குத் தெரியாது,” என்று பா.ரஞ்சித் திங்கள்கிழமை தனது நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்த புளூ ஸ்டார் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசும்போது கூறினார்.

பாரதிய ஜனதா கட்சி தனது சித்தாந்தத்தில் தெளிவாக இருப்பதாக அண்ணாமலை கூறினார். இது அவருடைய கருத்து; கற்பூரம் ஏற்றாதவர்களை தீவிரவாதிகள் என்று பா.ஜ.க.,வோ அல்லது ஆர்.எஸ்.எஸ் அமைப்போ ஒருபோதும் கூறவில்லைஎன்று சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறினார்.

1952 முதல், அனைவரையும் உள்ளடக்கி, தார்மீக அடிப்படையில், நல்லொழுக்க முறையில், ராமர் கோவிலை எழுப்புவோம் என்று உறுதியளித்தோம். ஆட்சியில் இருந்தும் நாடாளுமன்றத்தில் எந்த ஒரு சட்டத்தையும் கொண்டு வராமல் பொறுமையுடன்... உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருந்து, தீர்ப்பு வந்ததைத் தொடர்ந்து, நிகழ்வின் முதல் துவக்கத்தை முஸ்லிம் சகோதரர்களுக்குக் கொடுத்தோம். இது ஒரு தனி நபர் செய்த செயல் அல்ல. மக்கள் ஒன்றிணைந்து இந்த கோவிலை எழுப்பியுள்ளனர்,” என்று அண்ணாமலை கூறினார்.

ராமர் கோவில் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல, முழு நாட்டிற்கும் சொந்தமானது என்று கூறிய அண்ணாமலை, அதன் கட்டுமானத்தில் முஸ்லிம்கள் உட்பட அனைவரும் பங்களித்துள்ளனர் என்று கூறினார்.

என் மண் என் மக்கள் யாத்திரையைப் பற்றிப் பேசிய அண்ணாமலை, யாத்திரைகள் எப்போதும் பா.ஜ.க.,வை ஒரு படி மேலே கொண்டு போகும் என்றும், ராமர் மந்திர் பிரான் பிரதிஷ்தா அத்தகைய வெற்றிக்கு ஒரு உதாரணம் என்றும் கூறினார்.

என் மண் என் மக்கள் ஒரு வித்தியாசமான யாத்திரை. இது அரசியல் மாற்றத்திற்கானது. தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை காட்டுகிறோம். மேலும் பலர் கட்சியில் இணைகின்றனர். நாங்கள் மக்களைச் சந்தித்து, மாநிலத்தின் ஒவ்வொரு கிராமத்திற்கும் பா.ஜ.க.,வை அழைத்துச் செல்கிறோம். இவை அனைத்தும் 2024 மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லைஎன்று அண்ணாமலை கூறினார்.

யாத்திரையின் முடிவில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக பா.ஜ.க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அண்ணாமலை கூறினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Pa Ranjith Annamalai Ram Temple
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment