New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/03/q8W9SiX1gP9EduRQEDJV.jpg)
ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் இருந்து சர்புதீன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளது.
Advertisment
இந்த நிலையில் கடற்கரையில் இருந்து சுமார் 25 கடல்நாட்டிக்கல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் ஏற்பட்ட பழுது காரணமாக நடுக்கடலில் படகு மூழ்கி விபத்துக்குள்ளானது.
இந்த நிலையில் படகில் மீன் பிடிக்க சென்ற பரிது, அனீஷ், மாதவன் ஆகிய மூன்று மீனவர்கள் நீச்சல் அடித்து கரை திரும்பிய நிலையில் இப்ராஹிம் ஷா என்ற மீனவர் மட்டும் மாயமாகியுள்ளார்.
இதனை அடுத்து கடலோர காவல்குழுமம் போலீசார், கடலோர காவல் படையினர் மாயமான மீனவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.