சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களுக்கு சமீப காலத்தில் அதிகளவிலான வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் இதன் எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது. இவ்வாறு மிரட்டல் விடுக்கப்பட்டதும் அதிகாரிகள் சோதனை நடத்துவதால், பெறப்பட்ட மிரட்டல்கள் அனைத்தும் வதந்தி எனக் கண்டறியப்படுகிறது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய தினம் மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் பெறப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, அதிகாலை வரை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர். அதன்பின்னர், வெடிகுண்டு மிரட்டல் வதந்தி எனக் கண்டறியப்பட்டது.
இச்சம்பவம் குறித்து போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“