Advertisment

கோவையில் பிரபல பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் தீவிர சோதனை

கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் உள்ள பத்ம சேஷாத்ரி பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

author-image
WebDesk
New Update
Bomb threat to PSBB school in Coimbatore Police intensive search Tamil News

கோவை பத்ம சேஷாத்ரி பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

coimbotore: கோவை வடவள்ளி அடுத்த சோமையம்பாளையம் பகுதியில் பத்ம சேஷாத்ரி பள்ளி (PSBB) செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தப் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நிலையில் வடவள்ளி போலீசார் பள்ளிக்குச் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

Advertisment

மேலும், பள்ளியில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலிசாரும் தீவிர சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த தகவல் பரவிய நிலையில், பதற்றமடைந்த  குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக பள்ளி முன்பாக திரண்டு பதற்றத்துடன் குழந்தைகளை அழைத்து சென்றனர். 

மேலும் பள்ளி வாகனங்களில் வரும் குழந்தைகளும் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில்  பெரும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதே போல் சென்னை பள்ளியிலும் வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

coimbotore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment