/indian-express-tamil/media/media_files/3m42ZrUFZO8tMklC2Iak.jpg)
திருச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
திருச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சியில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இதேபோன்று திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதை தொடர்ந்து காவல்துறையினர் தீவிர சோதனை ஈடுபட்டனர். பின்னர் இது புரளி என்று தெரிய வந்தாலும், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், திருச்சியில் உள்ள ப்ரீஸ் ஹோட்டல், கோர்ட் யார்ட், திலகவதி , கண்ணப்பா போன்ற நட்சத்திர ஹோட்டல்களுக்கு இன்று (அக்டோபர் 13) வெடிகுண்டு மிரட்டல் இமெயில் மூலம் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் 4 ஹோட்டல்களிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மேலும், சும்மா மிரட்டல் என்று தெரியவந்தது.
செய்தி: க. சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.