/indian-express-tamil/media/media_files/QHtEYyEzqObIUgiDkQmB.jpg)
சென்னை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் இமெயில் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சமந்தபட்ட நபர் பயன்படுத்திய தனியார் நொட்வொர்க் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 13 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரம், அண்ணாநகர், சாந்தோம், ஜெ.ஜெ நகர் உள்ளிட்ட பகுதியில் உள்ள 13 தனியார் பள்ளிக்கு ஒரே இ-மெயில் ஐடியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்நிலையில் குற்றவாளி பயன்படுத்திய அங்கீகரிக்கப்படாத தனியார் நொட்வொர்க் குறித்து சைபர் கிரைம் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இமெயில் அனுப்பியவர் ஐ.பி. முகவரியை கண்டுபிக்க முடியாத அளவுக்கான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சைபர் குற்ற வல்லுநர்கள் உதவியுடன் ஐ.பி. முகவரியை கண்டறிய போலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.