Advertisment

மாறன் சகோதரர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!

சிபிஐ சார்பில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மாறன் சகோதரர்கள் வழக்கில் இன்று தீர்ப்பு!

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைக்கேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவிக்க கோரிய வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று  தீர்ப்பு வழங்குகிறது.

Advertisment

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனமான சன் தொலைக்கட்சிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை, முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐக்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முறைகேடுகளில் ஈடுபட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், 2007 ஆம் ஆண்டில் சென்னை பி.எஸ்.என்.எல்லின் பொது மேலாளராக இருந்த கே.பிரம்மநாதன், அந்த நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச் செயலாளராக இருந்த கவுதமன், சன் தொலைக்காட்சியின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீஷியன் ரவி, சன் தொலைக்காட்சி தலைவர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது டெல்லி சிபிஐ போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு ( வழக்கு பதிவு) செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

அந்த குற்றபத்திரிக்கையில், 2004 முதல் 2007 ஆம் ஆண்டு கால கட்டம் வரை மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சென்னை பி.எஸ்.என்.எல்லில் இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கு கேபிள் பதிக்க அனுமதி பெற்ற அதி உயர் தொலைபேசி இணைப்புகளை தனது சகோதரர் நிறுவனம் ஆனா சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார். மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்தான் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி உள்ளிட்ட சட்டபிரிவின் கீழ் சோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வழக்கின் விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. மேலும் இந்த வழக்கின் கடந்த ஆண்டு (2017) ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட, தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

இதன் பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கடந்த ஆண்டு (2017) அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யபட்டது.

இந்த வழக்கு இன்று 14 ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் முன் நிலுவையில் இருந்து வருகின்றது. குற்றஞ்சாட்டப்பட்ட கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய மனு மீதான வாதத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராகி சிபிஐ யின் குற்றசாட்டுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டனர்.

அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சன் டிவிக்கு தொலைபேசி இணைப்புகள் சட்டவிரோதக அளிக்கபட்டுள்ளது. இது அமைச்சராக பதவி ஏற்ற போது செய்து கொண்ட உறுதி மொழிக்கு எதிரானது. தயாநிதி மாறன் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு வழங்கபட்ட இணைப்புகளை சட்ட விதிகளுக்கு எதிராக அவர் வழங்கியுள்ளார். இவ்வாறு வழங்கியதன் மூலம் அரசு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கலாநிதி மாறன் மற்றும் சன் டிவி ஊழியர்கள் கூட்டு சதியில் ஈடுபடுபட்டுள்ளனர். அரசை ஏமாற்றுதல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்கள் உள்ளது எனவே இந்த வழக்கில் இருந்து குற்றச்சாட்டபட்ட யாரையும் விடுவிக்க கூடாது. என வாதிட்டனர்.

இதனையடுத்து சிபிஐ தரப்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதி நடராஜன் உத்தரவிட்டார்.

இதன் பிறகு சிபிஐ சார்பில் விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.இதனையடுத்து விடுவிக்க கோரிய மனு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது நீதிபதி நடராஜன் இன்று(14.3.18) அன்றூ தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment