ஹாய் கைய்ஸ் : அன்புள்ள திருடனுக்கு....கடிதம் எழுதிய ஆசிரியர்கள் - ருசிகர தகவல்
Psycho director mysskin : சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம்
Psycho director mysskin : சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம்
ஹாய் பிரெண்ட்ஸ் , வாங்க நாம இன்னைய நிகழ்ச்சிக்கு போகலாம்
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
நாட்டில் முதல்முறையாக ஒரே நாளில் அரசுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களிலிருந்து 92,700 ஊழியர்கள், அதிகாரிகள் இன்று (ஜன.,31) விருப்ப ஓய்வு பெறுகின்றனர்.
Advertisment
Advertisements
சும்மாவே, பிஎஸ்என்எல் மேல எல்லாத்துக்கும் நல்ல பேர் இருக்கு, இதுல இதுவேறயா..
அன்புள்ள திருடா... நீ திருடிச் சென்ற, 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பி கொடுத்துவிடு' என, கேரளாவில் உள்ள பள்ளியின் ஆசிரியர்கள், திருடனுக்கு எழுதிய உருக்கமான கடிதம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடிதத்தில், 'அன்புள்ள திருடனுக்கு... நீ யார் என்று எங்களுக்கு தெரியாது. ஆசிரியர்களின் 'டிஜிட்டல் கையெழுத்து' அடங்கிய பென் டிரைவை நீ எடுத்து போய்விட்டாய். அதில் உள்ள வருகைப் பதிவின் படிதான் எங்களுக்கு சம்பளம் கொடுப்பார்கள். அந்த கருவி இல்லாததால் எங்களுக்கு இந்த மாத சம்பளம் கிடைக்காது. வீட்டு செலவு, பெரியவர்களுக்கு மருத்துவ செலவு, கடனுக்கு வட்டி கட்டுதல் போன்றவைகள் உள்ளன. எனவே அந்த 'பென் டிரைவ்'வை மட்டும் திருப்பி கொடுத்து விடு, என கடிதத்தில் உருக்கமாக திருடனுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நம்பிக்கை அதானே எல்லாம்.....
இதிகாச புராணமான ராமாயணத்தில் எந்த லாஜிக்கும் இல்லை'' என்று சினிமா இயக்குனர் மிஷ்கின் பேசினார். ராமாயணத்தில் தனி மனிதன் பின்பற்ற வேண்டிய அறநெறிகள் பற்றி எவ்வளவோ விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. அதையெல்லாம் விட்டுவிட்டு சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்ற விமர்சனத்தை சமாளிப்பதற்காக ராமாயணத்திலேயே லாஜிக் இல்லை என மிஷ்கின் கூறுவது எந்தவகையில் நியாயம் என விபரமறிந்தவர்கள் புலம்புகின்றனர்.
படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோயில் கதைதான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil