தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை: நாமக்கல் மூதாட்டி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி கண்டனம்

நாமக்கல்லில் மூதாட்டி சாமியாத்தாள் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

நாமக்கல்லில் மூதாட்டி சாமியாத்தாள் கொலை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
AIADMKs move to snap ties with the BJP

தி.மு.க. அரசு இன்னும் திருந்தவில்லை: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ்தள பதிவில் தெரிவித்திருப்பதாவது: நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சாமியாத்தாள் என்ற மூதாட்டி, தனது தோட்டத்து வீட்டில் மர்மக் கொள்ளையர்களால் படுகொலை செய்யப்பட்ட செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். மறைந்த சாமியாத்தாளின் குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisment

சாமியாத்தாள் வெட்டப்பட்டு, கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கு ரத்தம் தேவைப் படுவதாகவும் நேற்று காலை தகவல் வந்ததும், அதிமுக சார்ந்த இளைஞர்கள் அதற்கான ஏற்பாடுகளை துரிதமாக மேற்கொண்டும், அதற்குள் சிகிச்சைப் பலனின்றி சாமியாத்தாள் உயிரிழந்துவிட்டார் என்பது மிகவும் வேதனைக்குரியது .

மாநிலத்தையே உலுக்கிய பல்லடம் மூவர் கொலை, சிவகிரி இரட்டைக் கொலை சம்பவங்களுக்குப் பிறகும் இந்த மு.க.ஸ்டாலின் மாடல் திமுக அரசு இன்னும் திருந்தவில்லை. தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில், தோட்டத்து வீடுகளில் உள்ள விவசாயிகளைக் குறி வைத்து நடத்தப்படும் இந்த கொலை - கொள்ளை சம்பவங்களை தடுக்க இந்த திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

Advertisment
Advertisements

பல்லடம், சிவகிரி வழக்குகளில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் மட்டுமே இந்த குற்றங்களை செய்தவர்களா? என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்கனவே உள்ள நிலையில், இச்சம்பவம் அச்சந்தேகத்தை வலுப்பெறவே செய்துள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொரு நாளும் பாதுகாப்பாக கடப்பதையே ஒரு அக்னிப் பரீட்சையாக மாற்றிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

சித்தம்பூண்டி சாமியாத்தாள் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், தொடரும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை இனியேனும் அடக்க முயலுமாறு பொம்மை முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Edappadi Palanisamy Eps

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: