Advertisment

'சரியான காலம்' வரும் போது தான் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

3 தொகுதிகளுக்கும் அவசர கதியில் நடத்த முடியாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tamil Nadu News Today

Tamil Nadu News Today

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களை வரும் ஏப்ரல் 18 அன்று நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisment

ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த முடியும். அவசர கதியில் நடத்த முடியாது என கூறினார். தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற உச்சநீதிமன்றம், ஏப்ரல் 18-ல் ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடமுடியாது என கூறி திமுக-வின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

முன்னதாக 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தயாராகவே உள்ளதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Election Commission Supreme Court Of India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment