சாலை விதிகளை மீறுவோரை தானாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் கேமராக்கள் ஸ்டார்ட்: வாகன ஓட்டிகளுக்கு திருச்சி போலீஸ் எச்சரிக்கை

திருச்சியில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களைக் கண்டறிந்து தானாக வழக்குப்பதிவு செய்யும் அதிநவீன கேமராக்களின் செயல்பட்டினை மாநகர காவல் ஆணையர் காமினி துவக்கி வைத்தார்.

திருச்சியில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களைக் கண்டறிந்து தானாக வழக்குப்பதிவு செய்யும் அதிநவீன கேமராக்களின் செயல்பட்டினை மாநகர காவல் ஆணையர் காமினி துவக்கி வைத்தார்.

author-image
WebDesk
New Update
Trichy Police warns motorists

சாலை விதிகளை மீறுவோரை தானாக படம் பிடித்து அபராதம் விதிக்கும் கேமராக்கள் ஸ்டார்ட்: வாகன ஓட்டிகளுக்கு திருச்சி போலீஸ் எச்சரிக்கை

திருச்சியில், தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாதவர்களை கண்டறிந்து தானாக வழக்குப்பதிவு செய்யும் அதிநவீன கேமராக்களின் செயல்பட்டினை மாநகர காவல் ஆணையர் காமினி துவக்கி வைத்தார்.

Advertisment

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி போக்குவரத்து விதிகளை மீறி பயணம் செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க போக்குவரத்து காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, திருச்சி மாநகரில் உள்ள 9 சோதனை சாவடிகளில் (Check post) மாநகருக்குள் உள்வரும் மற்றும் வெளியேறும் வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்வோர் மற்றும் 3 நபர்கள் ஒரே இருசக்கர வாகனத்தில் பயணிப்பர்களை தானாக படம் பிடித்து தானியங்கி வாகன எண் அடையாளம் காணும் தொழில்நுட்ப கேமரா மூலம் (ANPR) வழக்கு பதிவு செய்யும் விதமாக சுமார் 21 (Automatic Helmet Violation - ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கார்களில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்பவர்களை கண்காணித்து, அவர்களின் வாகனங்களின் எண்களை படம் பிடித்து (ANPR) வழக்குப்பதிவு செய்யும் விதமாக CP.1 கருமண்டம், CP.2 பஞ்சப்பூர் ஜங்சன், CP.4 அரியமங்கலம், CP.7 கோட்டை உட்பட 6 இடங்களில் (Automatic Seat Belt Violation ANPR) அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 

திருச்சி மாநகரில் மேலபுலிவார் ரோடு மற்றும் ராமகிருஷ்ணா பாலம் ஆகிய 2 இடங்களில் ஒருவழி பாதையில் விதிகளை மீறி செல்வோர்கள் மீது தானாக வழக்குப்பதிவு செய்யும் விதமாக (Automatic No Entry Violation Verifocal camera-க்கள்) அதிநவீன கேமராக்கள் பொருத்துப்பட்டுள்ளது.
திருச்சி மாநகரில் புதியதாக பொருத்துப்பட்டுள்ள 29 அதிநவீன உயரக கேமராக்கள் மற்றும் 10 உடலில் அணிந்த  கேமராக்களின் (Body Worn Camera) செயல்பாட்டினை மாநகர காவல் ஆணையர் காமினி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடங்கி வைத்தார்.

மேலும், புதிய கேமராக்கள் அனைத்தும் சிறப்பு மென்பொருள் (Software) மூலம் இணைக்கப்பட்டு திருச்சி மாநகர நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிகழ்வுகளை நேரடியாக கண்காணிக்கப்படும் எனவும், மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுனர்களை கண்டறிந்து அவர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்பிரிவுகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

செய்தி: க.சண்முகவடிவேல்

Trichy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: