/tamil-ie/media/media_files/uploads/2023/01/tamil-indian-express-45-3.jpg)
தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழ்நாடு அரசுப் பணிகளில் அமர முடியாது என்று சட்டப்பேரவையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியில் சேர்ந்த பின்னர் தமிழில் தேர்ச்சி பெற்று கொள்ளலாம் என்பதை, தமிழில் தேர்ச்சியடைந்தால் மட்டுமே அரசு பணியில் சேர முடியும் என்ற சட்டத் திருத்த மசோதா இன்று பேரவையில் நிறைவேறியது.
தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழித்தாளில் 40% தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று சட்டப்பேரவையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழ் மொழியில் போதிய அறிவு இல்லாத விண்ணப்பதாரர்கள் கூட, பணியில் சேர்ந்த தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் தமிழில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற 2016-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டத்தில் திருத்தும் பெற்று கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளிலும், தமிழ் தெரிந்த இளைஞர்களை மட்டுமே சேர்க்கவேண்டும் என்பதற்காக, ஆள் சேர்ப்பு முகாம்கள் மற்றும் போட்டி தேர்வுகளிலும் தமிழ் மொழி கட்டாயம் படுத்துவது என்கிற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2021 கொண்டுவரப்பட்ட அரசாணைக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதத்தில், சட்ட மசோதாவை இன்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.