சென்னை சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம் - கார் கவிழ்ந்து விபத்து

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தப் பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தப் பள்ளத்திற்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

author-image
WebDesk
New Update
Sinkhole

சென்னையில், முக்கிய சாலையின் நடுவே திடீரென பள்ளம் ஏற்பட்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

அதன்படி, சென்னை மத்திய கைலாஷில் இருந்து தரமணி செல்லும் பிரதான சாலையில் டைடல் பார்க் அமைந்துள்ளது. இன்று மாலை சுமார் 5 மணியளவில் இந்த டைடல் பார்க் முன்பாக செல்லும் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

குறிப்பாக, இந்தப் பள்ளத்திற்குள் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்தக் காரில் 4 பேர் பயணித்த நிலையில் உயிர்ச் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளத்தில் இருந்து காரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன.

சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தின் காரணமாக சுமார் 5 கிலோமீட்டர் தொலைவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், பள்ளம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: