விருதுநகரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட இமானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு.
தமிழகத்தில் முறையான அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கூடாது என தமிழக அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்கப்பட்டுள்ள பகுதியில் ஏராளமான சாதிய மோதல்கள் நிகழ்ந்துள்ளன. அனுமதி பெரும் வரை சிலையை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் கூறியுள்ளன.
விருதுநகர் அம்மச்சியாபுரத்தில் முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலையை அகற்றுவது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்யகோரிய வழக்கில் இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்திருக்கிறது.
விருதுநகரை சேர்ந்த பாலசுப்ரமணியம் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்தார். மேலும், மதுரை கிளை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார். அவற்றில், "அம்மச்சியாபுரத்தில் தியாகி இம்மானுவேல் சேகரனின் வெண்கல சிலையை வைக்க அனுமதிகோரிய வழக்கை விசாரித்த தனி நீதிபதி முறையான அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டிருக்கிறார்.
சிலை வைக்கப்பட்டபின் நடைபெற்ற அமைதி கூட்டத்தில், அனுமதி பெரும் வரை சிலையை மூடி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அது முறையாக பின்பற்றப்பட்டுள்ளது.
இந்த சூழலில் சிலையை அகற்றுமாறு முடிவெடுத்தது ஏற்றத்தக்கதல்ல. ஆகவே, இது தொடர்பான தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து மீண்டும் உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தார். இந்த வழக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளையின் நிர்வாக நீதிபதி மஹாதேவன், சத்தியநாராயண பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு கொண்டு விசாரிக்கபட்டது.
அப்போது, பட்டா இடத்தில் சிலை வைத்திருப்பது தெரியவந்தது. தற்போது தகர மூடி கொண்டு சிலையை மூடியுள்ளனர். மேலும், அப்பகுதியில் ஏகப்பட்ட சாதிய மோதல்கள் ஏற்பட்டிருக்கிறது.
ஆகவே, நீதிபதிகள் இம்மனுவை நிலுவையில் வைத்திருப்பது ஏன் என்று வினவினார்கள். சிலைக்கு பொறுப்பேற்று மனுதாரர் தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil