New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/11/hassan.jpg)
இந்துக்களுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்துக்களுக்கு எதிராக நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில்,
சென்னை காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் பிரபல வார பத்திரிக்கையொன்றில் ’என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வருகிறார். இதில், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ‘இந்து தீவிரவாதம் என்ற ஒன்று இனியும் இல்லை என கூற முடியாது”, என எழுதியிருந்தார். இதற்கு பல்வேறு இந்து அமைப்புகள், பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, “தீவிரவாதம் என்பது பயங்கரவாதமாகாது”, என கமல்ஹாசன் விளக்கமளித்தார்.
இதனிடையே, இந்துக்கள் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டதாக கமல் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிடகோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அதில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை காவல் துறை ஆணையர் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு கூடுதல் அவகாசம் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.