இரட்டைப் பதவி வகிக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை தந்தை பெரியார் திராவிடர் கழக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கண்ணதாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்துள்ளார்.
அந்த மனுவில், எந்தத் தகுதியின் அடிப்படையில் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும் தனது மனுவில் கண்ணதாசன், ஆரோவில் அறக்கட்டளை தலைவராக ஆதாயம் பெறும் பதவி வகித்து வருகிறார் எனவும் குற்றஞ்சாட்டிள்ளார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே திமுக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆரோவில் பதவி வகிக்கிறார் என்றும் அந்த பதவிக்க ஊதியம், ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil