Advertisment

தேனி எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தலை தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யவில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
case filed against theni mp ravindranath chennai high court - தேனியில் ஓ.பி.ஆர் குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

case filed against theni mp ravindranath chennai high court - தேனியில் ஓ.பி.ஆர் குமார் வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் வழக்கு!

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஓ.பி.இரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Advertisment

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23 ஆம் தேதி நடைபெற்றது. தேனி மக்களவைத் தேர்தலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. இந்த தேர்தலில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார்.

அவரின் வெற்றியை எதிர்த்து, தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நடைபெற்று முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பி. ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாகவும் அதற்குண்டான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்கள் வெளியானதாக தெரிவித்துள்ளார்.

வாக்காளர் பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதே போன்று பணப் பட்டுவாடா புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது இந்திய தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால் தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் ஏன் தேர்தலை தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்யவில்லை என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிகாரம் துஷ்பிரயோகம் செய்தும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டும் அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார் . எனவே இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment