Advertisment

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு!

டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து வழக்கு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு!

தமிழகத்தில் மூடப்பட்ட 1300 டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Advertisment

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுபான கடைகள் திறக்க உச்ச நீதிமன்றம் கடந்த 2016ம் தடை விதித்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 321 கடைகள் மூடப்பட்டன.

பின்னர், மாநகராட்சி, நகராட்சி வழியாக செல்லும் நெடுஞ்சாலைகளில் கடைகளுக்கான உரிமங்கள் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றாமல், 1,700 டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நெடுஞ்சாலைகளை உள்ளாட்சி சாலைகளாக மாற்றி அறிவிக்காமல் திறக்கப்பட்ட கடைகளை மூட வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் சாலைகளில் இருந்த கடைகளை திறக்க வகை செய்யும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கடந்த மே மாதம் அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்த அரசாணையின் அடிப்படையில் 1,300 கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இந்த அரசாணைக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை தலைவர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், மாநகராட்சி மற்றும் நகராட்சி சாலைகளை வகைப்படுத்தும் அதிகாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையருக்கு இல்லை என்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பை தவறாக புரிந்து கொண்டு பிறப்பிக்கப்பட்ட இந்த அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment