Advertisment

பரபரப்பான மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்கு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
AIADMK former minister MR Vijaya Bhaskar

திமுக அரசின் பால் விலை, மின்சார கட்டண உயர்வை கண்டித்து முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜய பாஸ்கர் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது எடுத்த படம்.

கரூர் மாவட்ட ஊராட்சி மன்ற துணை தலைவருக்கான தேர்தல் திங்கள்கிழமை (டிச.19) மதியம் 2 மணிக்கு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக நிர்வாகி திருவிக என்பவர் போட்டியிடுகிறார்.

இதற்காக அவர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் காரில் வந்துகொண்டிருந்தார். கார் கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வந்துகொண்டிருந்தது.

Advertisment

அப்போது வேடசந்தூர் அருகே கார் வந்த போது அங்கு மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர்கள் காரை தாக்கினர். காரின் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகி திருவிகவை கடத்தப்பட்டார்.

இந்த நிலையில்அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் கல்வார்பட்டி காவல் நிலைய சோதனை சாவடியில் அதிமுகவினர் வசம் ஒப்படைக்கப்பட்டார்.

முன்னதாக இது அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜய பாஸ்கர் முன்னிலையில் அதிமுகவினர் நூற்றுக்கணக்கானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் மீது, தாந்தோன்றிமலை போலீசார் சட்ட விரோதமாக கூடுதல், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment