பொய் செய்தி, அவதூறு பரப்புதல்: சவுக்கு சங்கர் மீது திருச்சியில் வழக்குப் பதிவு

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது திருச்சி தி.மு.க மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Savukku Shankar arrested related to ganja case theni Tamil News

அரசியல் விமர்சகரும் சவுக்கு இணையதளம் மற்றும் மீடியா சி.இ.ஓ சவுக்கு சங்கர் மீது திருச்சியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Listen to this article
0.75x1x1.5x
00:00/ 00:00

க.சண்முகவடிவேல்

Savukku Shankar: தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், திருச்சி மணப்பாறை அருகே தற்காலிக அரசு பஸ் டிரைவர் இயக்கிய பேருந்து கவிழ்ந்து 5 பேர் பலியாகி விட்டதாக 'சவுக்கு சங்கர் ஆர்மி' என்ற எக்ஸ் தளத்தில் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. 

Advertisment

இது முற்றிலும் பொய்யான செய்தி என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.அருண், திருச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் திருச்சி சைபர் கிரைம் போலீசார் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Savukku Shankar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: