சீமான் மீது 3 பிரிவில் வழக்கு: மணப்பாறை கோர்ட் அதிரடி உத்தரவு

சீமான் மீது மணப்பாறை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய மணப்பாறை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சீமான் மீது மணப்பாறை போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய மணப்பாறை நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Court orders to file case against seeman

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுகள் கடந்த காலங்களில் பலமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அதற்காக அவர் மீது வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் தமிழ் மொழி குறித்தும் பெண்கள் குறித்தும் பெரியார் பேசியதாக மேற்கோள் காட்டி சீமான் பேசியது கடும் சர்ச்சைகளை உண்டாக்கியது.

Advertisment

பெரியார் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனம் வைக்கவில்லை, அவதூறு பரப்பியுள்ளார் என அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெரியார் எங்கு அப்படி பேசினார் என ஆதாரம் கேட்கப்பட்ட நிலையில், இதுவரை அதற்கான ஆதாரத்தை சீமான் தரப்பு வழங்கவில்லை.

சீமானை எதிர்த்து திராவிட இயக்கங்கள், அமைப்புகள் சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் சீமானுக்கு எதிராக 50க்கும் மேற்பட்ட இடங்களில் புகார் அளிக்கப்பட அதன் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளை ஒரே இடத்தில் விசாரிக்க வேண்டும் என சீமான் வைத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இந்தநிலையில் பெரியார் குறித்து சர்ச்சைக் கருத்து தெரிவித்த சீமான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் மணப்பாறை காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்திருந்தார்.

Advertisment
Advertisements

அந்தப் புகார் மீது மணப்பாறை காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்யவில்லை, வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணப்பாறை அரசு வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த மணப்பாறை நீதிமன்றம், சீமான் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு உத்தரவிட்டது. 

WhatsApp Image 2025-04-29 at 12.43.15_3ed243ccb

WhatsApp Image 2025-04-29 at 12.43.18_9fd91753

இது குறித்து வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தெரிவிக்கையில் பொதுவெளியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், 'உனக்கு உடல் சோர்வு இருந்தால் அக்காவோ, தங்கையோ, தாயோ, மகளோ யாருடனாவது உடலுறவு கொண்டு உடல் சோர்வை தீர்த்துக் கொள்' என்று பெரியார் சொன்னதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அவதூறாக பேசியது பலரையும் வேதனையில் ஆழ்த்தியது.

இது தொடர்பாக நான் அந்த ஜனவரி மாதமே மணப்பாறை காவல் நிலையத்தில் நேரில் சென்று சீமான் மீது வழக்கு பதிவு செய்ய கோரி புகார் கொடுத்தேன். சுமார் ஏழு முறை என்னை அலைக்கழித்த பிறகு என் புகார் மீது மனு ரசீது மட்டும் வழங்கப்பட்டது. ஆனால் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது தொடர்பாக மணப்பாறை குற்றவியல் நீதிமன்றத்தில் நான் கடந்த மார்ச் மாதம் ஆறாம் தேதி வழக்குத் தொடர்ந்தேன். 

இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி அசோக்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. என்னுடைய மனு மீது மணப்பாறை காவல் நிலையத்தார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், சீமான் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக விரைவில் மணப்பாறை காவல் நிலையத்தார் வழக்கு பதிவு செய்வார் என நம்புகிறேன் என்றார். முன்னதாக, மணப்பாறை வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் ஏற்கனவே கொடுத்த புகாரின் அடிப்படையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு பெற்றுள்ளார். 

இந்த வேலையை செய்ய வேண்டிய மணப்பாறை காவல் நிலையம் திருச்சி டிஐஜி வருண்குமார் கட்டுப்பாட்டில் வருகிறது என்பதும், வருண்குமார் சீமான் மீது ஏற்கனவே திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நடப்பு விசாரணை தொடரும் நிலையில், இருவருக்கும் இடையே முட்டல் மோதல் தற்போது உச்சத்தில் இருக்கும் நிலையில் விரைவில் சீமான் மணப்பாறை நீதிமன்றத்திலும் வழக்குக்காக நடப்பார் எனக் கூறப்படுகிறது. 

மேற்கண்ட நீதிமன்ற உத்தரவை டிஐஜி வருண்குமார் தனது முழு அதிகார பலத்தையும் பிரயோகித்து சீமான் மீது வழக்கு பதிவு செய்து பல அதிரடி நடவடிக்கை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு சீமான் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், ஏற்கனவே பல காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து வழக்குகளிலும் சீமான் நேரில் ஆஜராக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன், விளைவுகளை தெரிந்தே சீமான் பேசினார், அதனால் சட்ட ரீதியாக அனைத்தையும் எதிர்கொள்வார் என்று  சீமானின் உடன்பிறப்புகள் தெரிவிக்கின்றனர்.

க.சண்முகவடிவேல்

Seeman

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: