ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து முருகனை, தனது மனைவி நளினி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் விடுவித்தது.
சிறையில் இருந்து விடுதலையான முருகனை, திருச்சி அகதிகள் முகாமில் தங்க வைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து, தனது கணவர் முருகனை அகதிகள் முகாமில் இருந்து விடுவித்து தன்னுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க கோரி நளினி மனு அளித்துள்ளார். இதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil