தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும்; காவிரி ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும்; கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rain deficit threatens another Karnataka-Tamil Nadu battle for water

காவிரி

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து அடுத்த 15 நாட்களுக்கு விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23 ஆவது கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29) டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். நீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்: சென்னை- நெல்லை வந்தே பாரத் தாமதம் ஏன்? புதிய வசதிகளை செய்து முடிக்க ரயில்வே உத்தரவு

எஸ்.கே.கல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் கூட்டத்தில் காவிரியில் இருந்து வினாடிக்கு 24 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு அதிகாரிகள் வலியுறுத்தினர்.

Advertisment
Advertisements

ஆனால் வழக்கம்போல் இந்த முறையும் கர்நாடக அரசு, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என மறுத்துவிட்டது. அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இப்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக அரசு விளக்கம் அளித்துள்ளது. கர்நாடகத்தில் உள்ள அணைகளில் தற்போது 47 சதவீத அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருப்பதாகவும், இதை குடிநீர் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளது. இது தமிழக அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த நிலையில், காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு 5,000 கனஅடி தண்ணீர் திறக்க, கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 15 நாட்கள் செப்.12-ம் தேதி வரை வினாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த முடிவை ஏற்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட பரிந்துரையை காவிரி மேலாண்மை ஆணையம் ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil

Karnataka Cauvery River Cauvery Management Board Tamil Nadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: