சென்னையில் தி.மு.க சார்பில் மே தின கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தி.மு.க மூத்த தலைவர்கள், தி-மு.க நாடாளுமன்ற தலைவா டி.ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மே தின கொண்டாட்டத்திற்கு பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.
தி.மு.க தொழிலாளர் நலன்களுக்காக பல்வேறு நல்ல செயல்களையும் தியாகங்களையும் செய்துள்ளது என்று கூறினார். தொடர்ந்து கர்நாடகா தண்ணீர் பிரச்சனை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த துரைமுருகன்,"கர்நாடகா என்றாவது தண்ணீர் தருகிறோம் என்று கூறியுள்ளார்களா?. அதிகமாக நீர் இருக்கும் போதும் ஒரே பதில் தான், குறைவாக நீர் இருக்கும் போதும் அதே பதில் தான் கூறுவார்கள்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கூட அவர்கள் தண்ணீர் திறந்து விட வில்லை. அவர்கள் உத்தரவை மதிக்காமல் உள்ளனர். இதை கேள்வி கேட்க வேண்டியது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“