/indian-express-tamil/media/media_files/gGuXvJ6J9agHfzXams48.jpg)
தமிழகத்துக்கு தினமும் 2,700 கன அடி தண்ணீர் திறக்க காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை
தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீர் திறக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே தொடர்ந்து வார்த்தை மோதல்கள் நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகா தமிழ்நாட்டுக்கு காவிரியில் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்துவிடாமல், கர்நாடக அரசு தொடர்ந்து தண்ணீர் தர மறுத்து வருகிறது.
காவிரி நீர் பங்கீடு விவகராத்தில், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையமும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் அமைக்கப்பட்டது. காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. மேலும், ஆணையத்தின் உத்தரவுப்படி கர்நாடகம், தமிழகத்துக்கு நீர் திறந்துவிடுகிறதா என்பதையும் கண்காணிக்கிறது.
இந்நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் வியாழக்கிழமை (நவம்பர் 23) காணொலி வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டுக்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீர் திறக்கவும், நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை திறந்துவிடவும் கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.