தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற ஐ.ஜி-யாக இருந்தவர் பொன். மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அவர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது
இந்நிலையில், பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி காதர் பாட்ஷா சென்னை உயர் நீதிமன்றத்தில், "பொன் மாணிக்கவேல் மீது சி.பி.சி.ஐ.டி வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்." என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
தொடர்ந்து என் மீதான புகார் மீது சிபிஐ விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் டி.ஐ.ஜி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி ஒருவர் தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதனையடுத்து சிபிஐ விசாரணையை நடத்தி அதனடிப்படையில் வழக்குப் பதிவும் செய்தது. மேலும் மதுரை மாவட்ட கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதற்கட்ட விசாரணை அறிக்கையின் நகலை வழங்கக் கோரி கீழமை நீதிமன்றத்தில் மனு செய்தேன்.
எப்.ஐ.ஆர்-ஐ தவிர பிற ஆவணங்களை தர இயலாது எனக்கூறி மனுவை திருப்பி அனுப்பி விட்டனர். விசாரணை அறிக்கையின் நகலை வழங்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே சீனிவாசன் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழக்கு சிபிஐ கையில் எடுத்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது விசாரணையின் போது மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதாக கண்டறியப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக உள்ள சுபாஷ் சந்திர போஸ் என்பவரை காப்பாற்று நோக்கில் பொன்மாணிக்கவேல் செயல்பட்டதனாலையே இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பொன்மாணிக்கவேல் வாங்கிய முன்ஜாமினில் நிபந்தனைகளை மீறி தற்போது சாட்சிகளை மிரட்டி வருவதாக தெரியவந்துள்ளது. அவருடைய முன்ஜாமின் ரத்து செய்வதற்கான நடவடிக்கையை சி.பி.ஐ தரப்பில் துவங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. மேலும் பொன் மாணிக்கவேல் கேட்கக்கூடிய விசாரணை அறிக்கை வழங்க முடியாது இதனால் வழக்கு விசாரணையில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நீதிபதி நீதிமன்றத்தால் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் எந்த அடிப்படையில் வழக்கு பதிவு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வழக்கின் விசாரணை ஆவணங்களை சிபிஐ நீதிபதியிடம் வழங்கினர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.