Advertisment

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு: சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகையை நிராகரித்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை அர்ஜூனன் என்பவர் தாக்கல் செய்திருந்தார்.

author-image
WebDesk
New Update
ஸ்டெர்லைட் காப்பர் ஆலை, தூத்துக்குடி, வேதாந்தா குழுமம், ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பான சிபிஐ குற்றப்பத்திரிகை நிராகரிக்கப்பட்டது.

tuticorin | sterlite | தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மூடக்கோரி 2018ஆம் ஆண்டு போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

போலீசார் போராட்டத்தை துப்பாக்கிச் சூடு மூலமாக கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்தச் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

இது குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அதில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட 17 காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் உள்ளிட்ட 21 பேர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப் பத்திரிகையில் இன்ஸ்பெக்டர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்தக் குற்றப் பத்திரிகைக்கு எதிராக அர்ஜூனன் என்பவர் மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சிபிஐ குற்றப்பத்திரிகையை நிராகரித்து உத்தரவிட்டது. தொடர்ந்து, மீண்டும் விசாரணை செய்து 6 மாதத்துக்குள் புதிய இறுதி விசாரணை அறிக்கையை தாக்க செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Tuticorin Sterlite Protest
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment