Advertisment

சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கில்  ஆ.ராசா உள்ளிட்ட 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

Advertisment

கடந்த  2015-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர்  ஆ. அராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

ஏழு ஆண்டுகள் பழமையான இந்த வழக்கின் விசாரணை முடிந்ததும்,  சமீபத்தில் சென்னையில் உள்ள சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா மற்றும் ஐந்து பேருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இறுதி விசாரணை அறிக்கை ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துக்களை குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில்,  தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விமான அலைகள் மற்றும் இயக்க உரிமங்களை  ஒதுக்கீடு செய்ததில், அரசு கருவூலத்திற்கு பெரும் இழப்பை  ஏற்படுத்தியதாக,  ஆ.ராசா மீது சிபிஐ குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, வழக்கு பதிவு செய்யப்பட்டது. டெல்லி தனி நீதிமன்றம் 2017ம் ஆண்டு அனைத்து குற்றட்டாட்டுகளிலிருந்து அவரை விடுவித்தது.  அதை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீடு வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment