Advertisment

நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்!- சிபிஎஸ்இ குற்றச்சாட்டு

நீட் குளறுபடிகளுக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நீட் வினாத்தாள் குளறுபடிக்கு தமிழக மொழிப் பெயர்ப்பாளர்களே காரணம்!- சிபிஎஸ்இ குற்றச்சாட்டு

'நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம்' என்று சிபிஎஸ்இ குற்றம் சாட்டியுள்ளது

Advertisment

2018ம் ஆண்டு நீட் தேர்வு தமிழ் மொழி வினாத் தாளில் 49 கேள்விகள் தவறாக கேட்கப்பட்டிருந்தது. எனவே தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை உயர்நீதிமன்றம், தமிழக மாணவர்களுக்குச் சாதகமாக தீர்ப்பளித்தது. இதில், தமிழில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஒரு கேள்விக்கு தலா 4 மதிப்பெண் வீதம், 49 கேள்விகளுக்கு மொத்தமாக 196 மதிப்பெண்கள் வழங்க சிபிஎஸ்இ-க்கு உத்தரவு அளித்தது.

மேலும் கூடுதல் மதிப்பெண் வழங்கி, 2 வாரத்திற்குள் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும், அதுவரை மருத்துவ கலந்தாய்வு நடைபெறக் கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து, சிபிஎஸ்இ சார்பில் இன்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், "நீட் விவகாரத்தில் தமிழ் வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடிக்கு தமிழக மொழி பெயர்ப்பாளர்கள்தான் காரணம். தமிழகஅரசு பரிந்துரைத்த அதிகாரப்பூர்வ மொழி பெயர்ப்பாளர்கள்தான் நீட் வினாத்தாளை தமிழில் மொழி பெயர்த்தனர்" என்று சிபிஎஸ்இ குறிப்பிட்டுள்ளது.

More details Awaited....

Chennai High Court Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment