மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ம் வகுப்பில் 30% குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயில் (FAIL) என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறையை நடப்பு கல்வியாண்டு முதல் சி.பி.எஸ்.இ அமல்படுத்துகிறது. இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், சி.பி.எஸ்.இ-யில் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற விதி ரத்து செய்யப்பட்டதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
தி.மு.க. அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் இதன் காரணமாகவே எதிர்த்து வருகிறது. மத்திய அரசின் நடவடிக்கையால் மாணவர்கள் கல்வி இடைநிற்றல் அதிகரிக்கும். தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களுக்காகதான் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று ஆரம்பம் முதலே கூறி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கையை சி.பி.எஸ்.இ. பள்ளிகள் செயல்படுத்தும்போது பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. பள்ளிகள் கையெழுத்து கேட்டால் பெற்றோர் போட்டுத் தாக்கூடாது.
5, 8ம் வகுப்பு மாணவர்களை பெயில் ஆக்கும் முடிவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கடனை வாங்கி சி.பி.எஸ்.இ. பள்ளியில் சேர்க்கும் பெற்றோர் எவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாவார்கள்? தி.மு.க-வினரின் பிள்ளைகளுக்காக பேசவில்லை; அனைத்து மாணவர்களுக்காகவும் பேசுகிறோம். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மாநில பாடத்திட்டத்திலும் இதேநிலைதான்.
அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.முதலமைச்சர் அறிவுறுத்தல்படியே இன்று இந்த விளக்கத்தை அளித்துள்ளேன். உச்சநீதிமன்ற உத்தரவின்படி கொண்டு வரப்பட்ட சட்டங்களை நீர்த்துப்போக ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.
தேசிய கல்விக் கொள்ளை உள்ளே நுழைந்தால் மாநில கல்வி அமைப்பே இல்லாமல் போய்விடும் நிலை உருவாகும். தமிழக அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். திமுக அரசு அனைத்து மாணவர்களுக்காகவும் போராடி வருகிறது. மாநில கல்விக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும். வரலாற்றில் தேச விரோதிகளை, தியாகிகளாக மாற்றுகிறார்கள். தரமான கல்வி வழங்க புது புது திட்டங்களை உருவாக்கி வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்