சென்னையில் நடந்த திருமணத்திற்காக கேரளாவிலிருந்து சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன், பெரியமேட்டிலுள்ள தனியார் விடுதியில் மூன்று நாட்களுக்கு அறைகள் எடுத்து தங்கியுள்ளார்.
வராண்டாவில் இருக்கும் சி.சி.டி.வி கேமரா அறையைப் பார்த்து இருந்தபடியால், சந்தேகம் அடைந்த சுரேஷ் விடுதி ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பிறகு வரவேற்பு அறையை அவர் கடந்து வரும் போது, விடுதி ஊழியர்கள் சி.சி.டி.வி மானிட்டரைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த சுரேஷ், உடனே அந்த மானிட்டரை சோதனையிட்டபோது, தனது குடும்பத்துப் பெண் உடை மாற்றும் காட்சி அதில் பதிவாகியிருப்பது தெரிய வந்தது.
உடனே பெரியமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், விடுதி ஊழியர்கள் விஜயக்குமார், முஸ்தபா மற்றும் யாசின் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதி அறையில் சி.சி.டி.வி பொருத்தப்பட்டிருந்த செய்தி சென்னை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.