சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழிச்சாலை திட்டம் ரத்து - மத்திய அரசு

மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே நிலத்தை கையகப்படுத்த முற்பட்டதேன் என்று நீதிமன்றம் கேள்வி

மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போதே நிலத்தை கையகப்படுத்த முற்பட்டதேன் என்று நீதிமன்றம் கேள்வி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 live updates

Election 2019 live updates : சேலம் 8 வழிச்சாலை திட்டம் ரத்து

8 வழிச்சாலை : சென்னையில் இருந்து சேலம் வரையிலான போக்குவரத்திற்காக தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டது எட்டுவழிச் சாலை திட்டம். இச்சாலை போடுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வந்தது மாநில அரசு.

Advertisment

நிலத்தினை கையகப்படுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

விசாரணைக்கு வந்த 8 வழிச்சாலை வழக்கு

இந்த வழக்கினை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசு தாக்கல் செய்தது.

அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்பே எப்படி நிலத்தினை அளக்கும் பணிகளை நீங்கள் தொடங்கலாம் என்றும்? மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போது, நிலங்களை எப்படி உட்பிரிவு செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பினர்.

Advertisment
Advertisements

அதற்கு மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இந்த சாலை போடுவதற்கான அனுமதி கிடைக்காவிட்டால் இத்திட்டத்தினை கைவிடுவோம் என்று கூறப்பட்டது.

முறையான அனுமதி பெறுவதற்கு முன்பே தர்மபுரி ஆரூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 1200 மரங்களை நடுவதற்காக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Salem

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: