8 வழிச்சாலை : சென்னையில் இருந்து சேலம் வரையிலான போக்குவரத்திற்காக தமிழக முதல்வரால் கொண்டுவரப்பட்டது எட்டுவழிச் சாலை திட்டம். இச்சாலை போடுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முனைப்பில் செயல்பட்டு வந்தது மாநில அரசு.
நிலத்தினை கையகப்படுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்தனர். நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்பி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கினை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. அவர்கள் அளித்த உத்தரவின் பேரில் 8 வழி சாலை திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகளை அட்டவணையாக மத்திய அரசு தாக்கல் செய்தது.
அதனை ஆய்வு செய்த நீதிபதிகள், சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்கு முன்பே எப்படி நிலத்தினை அளக்கும் பணிகளை நீங்கள் தொடங்கலாம் என்றும்? மக்களிடம் கருத்து கேட்டுக் கொண்டிருக்கும் போது, நிலங்களை எப்படி உட்பிரிவு செய்யலாம் என்றும் கேள்வி எழுப்பினர்.
அதற்கு மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இந்த சாலை போடுவதற்கான அனுமதி கிடைக்காவிட்டால் இத்திட்டத்தினை கைவிடுவோம் என்று கூறப்பட்டது.
முறையான அனுமதி பெறுவதற்கு முன்பே தர்மபுரி ஆரூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலாக 1200 மரங்களை நடுவதற்காக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Center will call off the 8 way lane if environmental dept gives no clearance to the plan
முதல்வன் அர்ஜூனாக மாறிய கல்லூரி மாணவி : உத்தரகண்ட் அரசு அசத்தல்
புலி எப்போதும் இப்படி கோபத்தை கட்டுப்படுத்தாது: எச்சரிக்கை வீடியோ
காயமடைந்தாலும் விளையாட தயாராக இருந்தேன் : மனம் திறந்த ஆல்ரவுண்டர் ஜடேஜா
பிப்.18 முதல் ஆன்லைன் வகுப்பு? தெளிவு படுத்துமா அண்ணா பல்கலைக்கழகம்?
ஆள் துணையுடன் சசிகலா எழுந்து நடக்கிறார்: லேட்டஸ்ட் மெடிக்கல் ரிப்போர்ட்