நீட் மறுதேர்வு நடத்த முடியாது: சென்னை ஐகோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Chennai high court

மின்தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு தங்களது முழு திறமையுடன் தேர்வு எழுத முடியவில்லை என்றும் கூறி, ஆவடி மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேர்வு கோரி வழக்கு தொடர்ந்தனர்.

சென்னை அடுத்த ஆவடியில் உள்ள ஒரு நீட் தேர்வு மையத்தில் ஏற்பட்ட மின்தடையால் மறுதேர்வு கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில், மின்தடை காரணமாக தேர்வில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த முடியாது என மத்திய அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

Advertisment

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் இளநிலை நுழைவுத் தேர்வு 2025, ஜூன் 4-ம் தேதி இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் நடைபெற்றது. சென்னை ஆவடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில், 464 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில், கனமழை காரணமாக பிற்பகல் 3 மணி முதல் 4.15 மணி வரை சுமார் ஒன்றேகால் மணி நேரம் மின்தடை ஏற்பட்டது. இதனால் அந்த மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, மின்தடையால் குறைந்த வெளிச்சத்தில் தேர்வு எழுதியதாகவும், இதனால் கவனச்சிதறல் ஏற்பட்டு தங்களது முழு திறமையுடன் தேர்வு எழுத முடியவில்லை என்றும் கூறி, ஆவடி மையத்தில் தேர்வெழுதிய 16 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேர்வு கோரி வழக்கு தொடர்ந்தனர். மாணவர்களின் மனுவை விசாரித்த நீதிமன்றம், நீட் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை (03.06.2025) சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்தடை காரணமாக தேர்வில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எனவே மறுதேர்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும் வாதிட்டார்.

Advertisment
Advertisements

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கின் தீர்ப்பை ஜூன் 6 ஆம் தேதி வழங்குவதாக அறிவித்துள்ளது.

Chennai High Court

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: