மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு: தமிழகத்திற்கு எத்தனை கோடி விடுவிப்பு? அதிகபட்சம் நிதி பெறும் மாநிலம் எது?

தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
secretariate and centre

பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாநிலங்களுக்கு வரி பகிர்வுக்காக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது.

பண்டிகை காலத்தை முன்னிட்டு, மாநிலங்களுக்கு வரி பகிர்வுக்காக ரூ.1.78 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசு நாடு முழுவதும் பெறும் வரி வருவாய் தொகையை, மாநில அரசுகளுக்கு பகிர்ந்து வழங்குகிறது. அதன்படி, தமிழ்நாடு உள்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி பகிர்வாக ரூ.1,78,173 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 

Advertisment

மத்திய அரசின் நிதி பகிர்வில், தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நிதி பகிர்வாக மாநிலங்களுக்கு அக்டோபர் மாதம் வழங்க வேண்டிய தொகையுடன் கூடுதலாக ஒரு மாத தவணையை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி, கூடுதல் தவணையாக முன்கூட்டியே ரூ.89,086.50 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. 

மத்திய அரசு இந்த நிதிப் பகிர்வு குறித்து, பண்டிகைக் காலத்தைக் கருத்தில் கொண்டும், மாநிலங்கள் மூலதனச் செலவினங்களை விரைவுபடுத்துவதற்கும், அவற்றின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிக்கும் வகையிலும் ஒரு மாத தவணையை முன்கூட்டியே விடுவித்துள்ளதாக தெரிவித்துள்ளது. .

Advertisment
Advertisements


அதன்படி, மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடி, ஆந்திரா – ரூ. 7,211 கோடி, அருணாச்சல் பிரதேசம் – ரூ. 3,131 கோடி, அசாம் – ரூ. 5,573 கோடி, பீகார் – ரூ. 17,921 கோடி, சத்தீஸ்கர் - ரூ. 6,070 கோடி, கோவா – ரூ. 688 கோடி என நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மேலும், குஜராத்திற்கு – ரூ. 6,197 கோடி , அரியானா – ரூ. 1,947 கோடி, இமாச்சல் பிரதேசம் – ரூ.1,479 கோடி, ஜார்கண்ட் – ரூ. 5,892 கோடி, கர்நாடகா – ரூ. 6,498 கோடி, கேரளா – ரூ. 3,430 கோடி  என மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

அதே போல, மத்திய பிரதேசத்திற்கு – ரூ. 13,987 கோடி, மராட்டியம் - ரூ. 11,255 கோடி , மணிப்பூர் – ரூ. 1,276 கோடி , மேகாலயா – ரூ. 1,367 கோடி, மிசோரம் – ரூ. 891 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நிதிப் பகிர்வில், நாகாலாந்துக்கு – ரூ. 1,014 கோடி, ஒடிசா – ரூ. 8,068 கோடி, பஞ்சாப் – ரூ. 3,220 கோடி, ராஜஸ்தான் – ரூ. 10,737 கோடி, சிக்கிம் – ரூ. 691 கோடி, தெலங்கானா – ரூ. 3,745 கோடி, திரிபுரா – ரூ. 1,261 கோடி , உத்தரப்பிரதேசம் – ரூ. 31,962 கோடி, உத்தரகாண்ட் – ரூ. 1,992 கோடி, மேற்கு வங்கம் – ரூ. 13,404 கோடி என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: