ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புகார்களில் பாதி உண்மை,பாதி பொய்: ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் பேட்டி !

புற்றுநோய் கேந்திரமாக தூத்துக்குடி விளங்குவதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை

புற்றுநோய் கேந்திரமாக தூத்துக்குடி விளங்குவதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத்

ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத்

ஸ்டெர்லைட்..தூத்துக்குடி மக்களின் வாழ்வில் மறக்க முடியாத வார்த்தை. இதுவரை எந்த தொழிற்சாலையும் சந்தித்திராத ஏகப்பட்ட சர்ச்சைகள். 13 உயிர் பலி என மெட்ராஸ் திரைப்படத்தில் காட்டப்படும் சுவர் போல் பல பகீர் பின்னணிக் கொண்ட ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் வரலாறு உலகம் அறிந்த ஒன்று.

Advertisment

ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் :

கடந்த 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர். தமிழகத்தில் அவர்களின் போராட்டம் வெற்றி அடைய துப்பாக்கி சூடு வரை அரசாங்கம் சென்றிருக்க வேண்டுமா? என்ற கேள்வி அனைத்து தரப்பினரிடமும் உள்ளது. அதே நேரத்தில் எந்த மக்கள் ஆலையை மூட வேண்டும் என்றும் போராட்டத்தில் இறங்கினார்களோ, இன்று அவர்களே தொழிற்சாலையை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.

இப்படி பல்வேறு சர்ச்சையில் சிக்கி தவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையத்தில் இருக்கும் உண்மையான பிரச்சனைத்தான் என்ன? என்பதை விளக்கும் வகையில் ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் பிரபல ஆங்கில பத்திரிக்கையான financialexpress.com க்கு அளித்த சிறப்பு பேட்டி.

Advertisment
Advertisements

 ஸ்டெர்லைட் சி.இ.ஒ ராம்நாத் : வேதாந்தா நிறுவனத்தில் காப்பர் தொழிற்சாலையின் தலைமை நிர்வாக அதிகாரி. 30 ஆண்டுகளுக்கு மேலாக ரசாயனா தொழிற்சாலை, உலோகங்கள் குறித்த ஆய்வு, காப்பர் ரசாயன துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்.

1. கேள்வி:  போராட்டாக்காரர்கள் கூறியது போல் ஸ்டெர்லைட் ஆலைக்கு வேறு எந்த மாநிலத்திலும் அனுமதி அளிக்கவில்லையா?

பதில்: இது தவறான குற்றச்சாட்டு. மஹாராஷ்டிராவில் ரத்னகிரி என்ற இடத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.இந்த ஆலைக்கான திட்டம் முன்மொழியப்பட்ட தொன்னூறுகளில், இருந்த சில அமைப்பினர் பல்வேறு காரணங்களை கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ரத்னகிரியில் எரிவாயு ஆலை, ஜெ.எஸ்.டபிள்யு  எஃகு ஆலை, ஜெய்தபூர் அணு மின் நிலையம் போன்ற பல ராசாய ஆலையங்களுக்கு எதிராக தோன்றிய இந்த எதிர்ப்பு தான் கடைசியில்  காப்பர் மீது பாய்ந்தது. தூத்துக்குடியில் முதன்முதலாக ஸ்டெர்லைட் ஆலையை நிறுவ அதிமுக ஆட்சியிடன்   உரிமம் கோரப்பட்டது.  4,00,000 டன்கள் முதல் 8,00,000 டன் வரை திறன் கொண்ட இந்த திட்டத்தை திமுக அரசு ஏற்றுக்கொண்டது.

2. கேள்வி :  இந்தியாவில் காப்பர் தொழிற்சாலை அமைக்கப்படுவதற்கான  தேவை என்ன?

பதில்:  சுத்திகரிக்கப்பட்ட தாமிரத்தில் 4,00,000 டன்  உற்பத்தி திறன் கொண்ட ஸ்டெர்லைட் காப்பர் உள்ளது. பல்வேறு கீழ்நிலை தொழில்கள்-கம்பி வரைதல், மின்மாற்றிகள், ஆட்டோமொபைல், எலெக்ட்ரானிக்ஸ், பாத்திரங்கள் மற்றும் சக்தி ஆகியவற்றில் உலோகம் பயன்பாட்டைக் காண்கிறது.

பாஸ்போரிக் அமிலம் ஒரு மதிப்பு சேர்க்கப்பட்ட தயாரிப்பில்  ஸ்டெர்லைட் மிகப் பெரிய உற்பத்தியாளராகும், இது தென் இந்தியாவில் உரத் தொழிலின் முக்கிய மூலப்பொருள் ஆகும். உருகும் போது உற்பத்தி செய்யப்படும் செப்பு ஸ்லக் (V சாண்ட் என்று அழைக்கப்படுகிறது) என்பது நம்பகத்தன்மை வாய்ந்த மாற்று ஆற்றின் மணல் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்படும் மற்றும் சிமெண்ட் உற்பத்திக்கு ஒரு மூலப்பொருளாக உள்ளது. பாஸ்போரிக் அமிலத் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் ஜிப்சம் சிமெண்ட் தொழிலுக்கு முக்கிய மூலப்பொருளாக இருக்கிறது.

நாட்டின் சக்தி, மின்னணுவியல், ஆட்டோமொபைல், கெமிக்கல்ஸ், டிட்டர்ஜென்ஸ், சோப்புகள், சிமென்ட், கட்டுமானம் மற்றும் உரங்களின் அடிப்படை உள்கட்டமைவுக்கு பங்களிக்கும் அனைத்து முக்கிய தொழில்களுக்கும் ஸ்டெர்லைட் பயன்பாடு தேவை.

3. கேள்வி: ஸ்டெர்லைட் ஆலையத்தால் குடிநீர் மாசுப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில்?

பதில்: ஆலைக்கு உள்ளேயே சவ்வூடு பரவல் முறையில் கழிவுநீரை சுத்திகரிக்கும் நிலையத்தை அமைத்திருக்கிறோம். தொழிற்சாலைக்கு தேவையான 70 சதவீத நீரை மறு சுழற்சி முறையில் பயன்படுத்தி வருகிறோம். 30 சதவீத தேவைக்கு மட்டுமே தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்திடம் இருந்து பெறுகிறோம்.

சல்பர் டை ஆக்சைடை குறைந்த அளவில் வெளியேற்றும் நிறுவனங்களில் ஸ்டெர்லைட் நிறுவனம் 2-ம் இடத்தில் உள்ளது.  முதலிடத்தில் ஜெர்மனியில் உள்ள நிறுவனம் உள்ளது.செம்பு உற்பத்தி செய்வதால் புற்றுநோய் வருவதாகவும், தமிழகத்தின் புற்றுநோய் கேந்திரமாக தூத்துக்குடி விளங்குவதாகவும் பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதில் சிறிதும் உண்மையில்லை

4. ஸ்டெர்லை ஆலையால்  சுற்றுச்சூழலுக்கு கேடா?

பதில்: 1996-ல் ஸ்டெர்லைட் தொடங்கப்பட்டது 1,00,000 டன் கெப்பாசிட்டி. இப்போது 4,00,000 டன். இதையே மாற்றி மாற்றித்தான் குறிப்பிடுகிறார்கள். தொடங்கியபோது இருந்த விதிப்படி ஒரு டன் சல்ஃப்யூரிக் ஆசிட்டுக்கு 4 கிலோ சல்ஃபர் வெளியிடலாம் என்றிருந்தது. பின் உலக விதி 2 கிலோ எனக் குறைக்கப்பட்டது. எங்களுக்குத் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒரே ஒரு கிலோவுக்குதான் அனுமதி அளித்தது. ஆனால், நாங்கள் அதையும்விட குறைவான சல்ஃபர் வெளியாகும்படி எங்கள் புராசஸை மாற்றியமைத்தோம். அதனால், ஆரம்பத்திலிருந்த புகைபோக்கியின் உயரமே எங்களுக்குப் போதுமானதாக இருக்கிறது. முன்பு எங்களிடம் ஒரே ஒரு சல்ஃப்யூரிக் ஆசிட் யூனிட் இருந்தது. இப்போது இரண்டு இருக்கிறது. எப்படி பார்த்தாலும் பாதுகாப்பான அளவில்தான் நாங்கள் இயங்குகிறோம்.

 

Thoothukudi Sterlite Protest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: