Advertisment

'கனமழைக்கு வாய்ப்பு' - சென்னை வானிலை ஆய்வு மையம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Weather News In Tamil, Weather Today, Weather Tomorrow, வானிலை, வானிலை அறிக்கை

வானிலை அறிக்கை

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை, "வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. உள் தமிழகம் மற்றும் தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.

புல் புல் புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கம் ஒட்டியுள்ள கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். தமிழக கடல்பகுதியில் மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் இல்லை. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேந்தமங்கலம் - 14செ.மீ., ஓமலூர், செங்கம் - 9செ.மீ., மழை பதிவாகியுள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னையில், அசோக் நகர், வடபழநி, கேகேநகர் , திருவள்ளிக்கேணி, அண்ணாசாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், திநகர், தாம்பரம், பல்லாவரம், மடிபாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி, கிண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை நிலவரத்தைப் பொறுத்தவரை, நாமக்கல்லில் 14 செமி, திருவண்ணாமலை 9 செமி, விருதுநகர், கன்னியாகுமரியில் தலா 7 செமி மழைப் பதிவாகியிருந்தது.

புல்புல் புயல் காரணமாக, தமிழ்நாட்டு மீனவர்களுக்கு எந்த எச்சரிக்கையும் விடப்படவில்லை. அதே நேரத்தில், ஒரிசா, வங்கதேசம் கடல் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Rain In Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment