மதுரை அழகர் கோவிலில் தேரோட்டம் 

ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
Chariot procession at Madurai Alaghar Temple

மதுரை அழகர் கோவிலில் தேரோட்டம் 

மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ள அழகர் மலையில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும். இக்கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்று.

Advertisment

சித்திரைத் திருவிழாவின் பொழுது, கள்ளழகர் கோயிலிலிருந்து புறப்பட்டு மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு மதுரை நகருக்கு வருகிறார்.

இந்த விழா மதுரையில் வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமி அன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ் பெற்றது.

publive-image

அந்த வகையில் மதுரை அழகர்கோயில் ஆடி திருவிழா கடந்த 3 ஆம் தேதி தொடங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவை முன்னிட்டு தினமும் காலையில் கள்ளழகர் தங்கப் பல்லக்கிலும், மாலையில் சிம்மம், அனுமன், கருடன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பலித்தார்.

Advertisment
Advertisements

இந்நிலையில் இன்று விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் தேரில் எழுந்தருளி உள்ளார்.

ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளியுள்ள அழகரின் தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் பக்தர்கள் அதிக அளவில் கூடி உள்ளனர்.

செய்தியாளர் செந்தில் குமார்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Madurai Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: