tamilnadu-rain | tirunelveli | tuticorin | கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், உள்மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து நாளை தமிழ்நாட்டின் ஒரு சில இடங்கள மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யக் கூடும்
டிச.30ஆம் தேதியை பொறுத்தமட்டில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
டிச.31ஆம் தேதி தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும்.
புத்தாண்டு தினமான ஜன.1ஆம் தேதி தென் தமிழகத்தின் ஒருசில இடங்களிலும் வடதமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்யக் கூடும்.
அதேநேரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஜன.2ஆம் தேதியில் இருந்து 3ஆம் தேதி வரை புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். கடந்த 24 மணி நேரத்தில் திருநெல்வேலியின் மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் மழைப் பொழிவு பதிவாகி உள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“