Advertisment

செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: மக்களை வெளியேற்றும் மாநகராட்சி

செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் உபரி நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Water

கனமழையின் காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் செம்பரம்பாக்கம் மற்றும் பூண்டி ஏரிகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.

இதனால் சென்னை நகர மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 24 அடியில், 23.29 அடி எட்டியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியிலிருந்து உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. ஏரியின் மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 3453 மில்லியன் நீர் இருப்பு உள்ளது. அதே போல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 6500 கன அடி நீர் வரத்து உள்ளது.

இதன் காரணமாக நீர்வளத் துறை அதிகாரிகள் பரிந்துரையின் படி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீரை திறக்க உத்தரவிட்டார்.  முதல் கட்டமாக இன்று காலை 8 மணியளவில் 5 கண் மதகுகள் வழியாக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, குன்றத்தூர், காவனூர், சிறுகளத்தூர், வழுதளம்பேடு, திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட ஆறு கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisment
Advertisement

இந்நிலையில், நீர் வரத்து மேலும் அதிகரிப்பால் 5 கண் மதகில் 2 மற்றும் 4-வது ஷட்டர்கள் வழியாக 4 ஆயிரம் கன அடி நீர் வெளியாற்றப்பட்டது.

இதேபோல், பூண்டி ஏரியில் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு 15,500 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. 35 அடி உயரம் கொண்ட ஏரியின் நீர் மட்டம், 34.68 அடியை எட்டியுள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழலால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சி சார்பாக இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

குறிப்பாக, 47 ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அடையாறு ஆற்றில் வெள்ளம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அதன்பேரில், வரதராஜபுரம், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதி மக்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இதேபோல், புழல் நீர்நிலையில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீர், வடபெரும்பாக்கம் பகுதிகளில் உள்ள சாலைகளை ஆக்கிரமித்துள்ளது.

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Chembarambakkam Lake
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment