உஷார் மக்களே... நம்பி வாங்கும் பேரீச்சையிலும் கெமிக்கல்: குற்றாலத்தில் 1000 கிலோ பறிமுதல்

குற்றாலத்தில் அருவிக் கரைகளில் மினரல் ஆயில் என்கிற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்பட்ட 1,000 கிலோ பேரீச்சம்பழத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

குற்றாலத்தில் அருவிக் கரைகளில் மினரல் ஆயில் என்கிற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்பட்ட 1,000 கிலோ பேரீச்சம்பழத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
New Update
dates

மினரல் ஆயில் கலப்படம்; குற்றாலத்தில் 1000 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

குற்றாலத்தில் அருவிக் கரைகளில் மினரல் ஆயில் என்கின்ற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்பட்ட 1,000 கிலோ பேரீச்சம்பழத்தை உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

Advertisment

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் அருவிக்கரைகளில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு பல்வேறு உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் சபரிமலைக்கு சென்று வரும் ஐயப்ப பக்தர்கள் ஆயிரக் கணக்காணோர் தினமும் குற்றாலத்திற்கு வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் குற்றாலத்தில் வந்து பிரசாதம் வழங்குவதற்காக சிப்ஸ், பேரீச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கமாக உள்ளது. 

இந்நிலையில், குற்றாலத்தில் விற்பனை செய்யப்படும் பேரீச்சம்பழம் அனைத்தும் தரம் குறைந்த மினரல் ஆயில் என்கிற ரசாயன கலவை கலந்து விற்பனை செய்யப்படுவதாக வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் குற்றாலம் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் மேற்கொண்ட 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் 1,000  கிலோ பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் மேற்கொண்ட 3 கடைகளில் நடைபெற்ற சோதனையில் சுமார் 1,000  கிலோ பேரீச்சம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisment
Advertisements

மேலும்,  உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட 1,000 கிலோ பேரீச்சம்பழம், 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா பாக்கெட்டுகளை குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது.

குற்றாலத்தில் ரசாயனம் கலக்கப்பட்ட 1,000 கிலோ பேரீச்சம்பழம் உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதன், மூலம் மக்கள் நம்பி வாங்கும் பேரீச்சம்பழத்தில் கெமிக்கல் கலக்கப்பட்டிருப்பது அம்பலமாக்யுள்ளது. இதனால், பேரீச்சம்பழம் வாங்கும்போது மக்களே உஷார் என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Kutralam

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: