Advertisment

ராணுவ தேர்வில் முறைகேடு: ஹரியானாவைச் சேர்ந்த 29 பேர் சென்னையில் கைது

சென்னையில் நடந்த ராணுவ போட்டித் தேர்வில் 'ப்ளூடூத்' மூலம் காப்பி அடித்து முறைகேட்டில் ஈடுபட முயன்ற ஹரியானாவைச் சேர்ந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்த 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் போலீஸ் விசாரணை : நாமக்கலில் நடந்த பரபரப்பு  

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவப் பள்ளியில் பாதுகாப்பு துறையில் குரூப் – சி பிரிவுக்கான போட்டி தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வில் ப்ளூடூத் மூலம் முறைகேட்டில் ஈடுபட்ட 28 பேர் மற்றும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் என 29 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment

பாதுகாப்பு துறையில் குரூப் – சி பிரிவுக்கான போட்டி தேர்வை பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 1,700 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.

காவல்துறையினர் கூறுகையில், "டிரேட்ஸ்மேன் மேட் (Tradesman mate) பதவிக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. காலை, மாலை என இருவேளைகளில் தேர்வு நடைபெற்றது. இந்ததேர்வில் 1,700 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். லெப்டினன்ட் கர்னல் ரீட்டா கும்பானி மாலையில் நடைபெற்ற தேர்வில் சோதனையில் ஈடுபட்டபோது, சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி கொண்டு முறைகேடாக தேர்வு எழுத முயன்ற 28 தேர்வர்களைப் பிடித்தார். மேலும், ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக ஒருவரைப் பிடித்து ஒப்படைத்தார்" என்று கூறினார்.

இதன் அடிப்படையில், நந்தம்பாக்கம் காவல்துறையினர் ஐடி சட்டம் பிரிவு 66 மற்றும் பிற தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், "முறைகேடு செய்ய பயன்படுத்தப்பட்ட ப்ளூடூத் கருவி சிறிய அளவில் இருந்தது. டெல்லி மற்றும் பிற பகுதிகளில் இருந்து இது தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளது.

பிடிப்பட்ட அனைவரும் ஹரியானாவைச் சேர்ந்த ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தேர்வில் கலந்துகொள்ள 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இளைஞர்கள் பெரிதாக படிக்கவில்லை. இதைப் பயன்படுத்தி அவர்களை தவறாக வழிநடத்தி இருக்கிறார்கள்.

ப்ளூடூத் கருவி மிகவும் சிறியதாக, காதுக்குள் எளிதாக மறைத்து வைத்துக்கொள்ளும்படி தயாரிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஹரியானா மற்றும் பிற பகுதிகளில் இது தயாரிக்கப்பட்டிருக்கலாம். 3 மணியளவில் தேர்வு தொடங்கியது. சந்தேகத்திற்கிடமாக ஒருவர் பிடிப்பட்ட நிலையில் அனைவரையும் சோதனை செய்யப்பட்டது. இதில் 29 பேர் கைது செய்யப்பட்டனர். ராணுவப் பள்ளியின் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறினார்.

ப்ளூடூத் கருவியை சோதனைக்கு உட்படுத்தியதில், அது செயல்படவில்லை எனத் தெரிந்தது. இருப்பினும் சைபர் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பபட்டுள்ளது என்று தெரிவித்தார். கைது செய்யப்பட்ட அனைவரும் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment