/indian-express-tamil/media/media_files/2024/11/06/4R1YwdaUKLL5Ab4B1UW0.jpg)
போலீசாரால் கைது செய்யப்பட்ட நபர்
சென்னை மதுரவாயல் அருகே வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்துவந்த பெண் உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் பாரதிதாசன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த விவகாரம் தொடர்பாக விபச்சார தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான போலீஸார் சந்தேகத்திற்குரிய வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.
விசாரணையில், வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு ஒரு பெண்ணை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது உறுதியானதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தியதாக சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த விஜயகுமார் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட விழுப்புரத்தைச் சேர்ந்த தீபா என்ற பெண்ணையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அவர்கள் வீட்டில் தங்கவைத்திருந்த ஒரு பெண்ணையும் போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார், மீட்கப்பட்ட பெண்ணை அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.