Advertisment

இந்த 7 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் நிறுத்தம்: சென்னை மக்களே உஷார்!

சென்னையில் இன்று மற்றும் நாளை, இரண்டு நாட்களுக்கு 7 இடங்களில் குடிநீர் நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
இந்த 7 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் நிறுத்தம்

இந்த 7 மண்டலங்களில் 2 நாள் குடிநீர் நிறுத்தம்

சென்னையில் இன்று மற்றும் நாளை, இரண்டு நாட்களுக்கு 7 இடங்களில்  குடிநீர் நிறுத்தப்படும் என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisment

குருஞ்சி நகர் கீழ்நிலை தண்ணீர் தொட்டி மற்றும்  மவுண்ட்- பூந்தமல்லி சாலை மார்கமாக செல்லும் குழாய்களில், சீரமைப்பு பணி நடைபெறுகிறது. குறிஞ்சி நகர் டேங்கில் இருந்து 700 மில்லி மீட்டர் அளவு கொண்ட தண்ணீர் குழாய், மவுண்ட்- பூந்தமல்லியின் 150 மில்லி மீட்டர் அளவு கொண்ட பிரதான குழாயில் இணைக்கப்படுகிறது என்று சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதனால் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இந்த பகுதியில்  குடி தண்ணீர் நிறுத்தப்படும்.

அம்பத்தூர் ( சோன் 7), அண்ணா நகர் ( சோன் 8 ) , தேனாம்பேட்டை ( சோன்9), கோடம்பாக்கம்  ( சோன் 10) , வளசரவாக்கம் ( சோன் 11) , ஆலந்தூர் ( சோன் 12), அடையார் ( சோன் 13)

இந்நிலையில் அவசர தேவைக்கு தண்ணீர் வேண்டும் என்றால், 044 4567 4567 என்ற தொலை பேசி எண்ணை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment