Advertisment

சென்னையில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த பெண் செவிலியர்- குழந்தையின் கால்களை வெட்டி எடுத்த கொடூரம்

இருவரும் தி. நகர் சவுத்போக் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
chennai

Chennai

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னையில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் செவிலியர் வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த போது குழந்தையின் கால்களை வெட்டி எடுத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

Advertisment

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வினிஷா (24), டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கும், சென்னையில் ஐடி கம்பெனியில் பணியாற்றி வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த செல்வமணி (29) என்பவரும் காதலித்துள்ளனர். இருவரும் தி. நகர் சவுத்போக் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில், திருமணம் செய்து கொள்ளாமலே ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதில் வினிஷா கர்ப்பமாகியுள்ளார். 7 மாதங்கள் ஆன அவருக்கு, திடீரென தீவிர வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. செவிலியரான வினிஷா வீட்டில் தனக்குத் தானே பிரசவம் பார்த்த போது, குழந்தையின் கால்களை அவரே வெட்டியுள்ளார். இதனால் குழந்தை இறந்து பிறந்தது.

இறந்த குழந்தையின் ஒரு காலை கழிப்பறையில் போட்ட வினிஷா, இறந்த குழந்தையுடன் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் தியாகராய நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் மீது இரு பிரிவுகளின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக வினிஷாவின் காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது வெளியாகி அனைவரது மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment